வவுனியா கந்தசுவாமி ஆலய வீதியில் இன்று (11.08.2017) மதியம் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாகயிருந்து வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட துவிச்சக்கரவண்டி மீது வவுனியா மணிக்கூட்டு சந்தியிலிருந்து கந்தசுவாமி ஆலய வீதி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் காயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.