வடகொரியா மீது நடவடிக்கைக்கு தயார் : டிரம்ப் அதிரடி அறிவிப்பு!!

1086

வடகொரியா மீது தாக்குதல் நடத்துவதற்கான இலக்கை முழு ஆயுத பலத்துடன் குறிவைத்து விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. உலகநாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரிய இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், அந்நாட்டின் மீது மீண்டும் புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டது.

இதற்கு வடகொரியா எங்கள் இறையாண்மைக்கு எதிரானது.
அதற்கு அமெரிக்கா உரிய விலை கொடுக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து பசிபிக் கடலில் உள்ள தனக்கு சொந்தமான குயாம் தீவு பகுதியில் அமெரிக்கா இராணுவ பயிற்சி மேற்கொண்டது.

அமெரிக்கா இராணுவ பயிற்சி மேற்கொள்ளும் குயாம் தீவு மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் க்வாசாங்-12 ஏவுகணையை வீச திட்டமிட்டுள்ளதாக வடகொரியா தெரிவித்திருந்தது.

அதன் பின வடகொரியாவின் இந்த செயலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் வட கொரியாவின் தலைநகரான பியாங்யாங் நகரில் உள்ள கிம் ஈ சுங் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர்.

வெண்ணிற சட்டைகளை அணிந்திருந்த அவர்கள் அனைவரும் வடகொரியா அதிபரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும், டொனால்டு டிரம்ப்பை எதிர்த்தும் முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது, இன்னும் ஒருசில நாட்களில் குவாம் தீவின் அருகில் உள்ள இலக்குகளை குறிவைத்து நான்கைந்து ராக்கெட்டுகள் ஏவப்படும் என வடகொரியா நாட்டின் ராக்கெட் தொழில்நுட்ப தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், வடகொரியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முழு ஆயுத பலத்துடன் தயார் நிலையில் இருக்கிறோம்.

வடகொரியா அறிவீனமாக நடந்து கொள்ள முயற்சித்தால் அதற்கான மாற்றுப் பாதையைவட கொரிய தேட நேர்ந்துவிடும் என்று பதிவேற்றம் செய்துள்ளார்