கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய உலகின் பிரமாண்டம்!!

493

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சற்றுமுன்னர் வருகை தந்துள்ளது.

எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான A-380 விமானமே இவ்வாறு வந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளன்.

அதற்கமைய டுபாயில் இருந்து இன்று மாலை 4.30 மணியளவில் வருகை தந்த இந்த விமானம் எவ்வித சிரமமும் இன்றி தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைக்கப்பட்டது. இதன் காரணமாக பாரிய விமானங்கள் தரையிறக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

இன்றையதினம் பாரிய விமான வெற்றிகரமாக தரையிறங்கியதன் மூலம், மிகப்பெரிய விமானங்கள் தரையிறக்க முடியும் என சர்வதேசத்திற்கு அறிவிப்பதற்கான சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்தி கொள்வதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.