எம்மீது நம்பிக்கை வையுங்கள் : உபுல் தரங்க நாட்டு மக்களிடம் விடுக்கும் வேண்டுகோள்!!

304

இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க அறிக்கை ஒன்றின் மூலம் கூறியுள்ளார்.

சில விடயங்களை வௌிப்படையாக பேச முடியாது என்ற போதிலும் இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

அனைத்து அணிகளும் பின்னடைவை சந்திப்பதாகவும், டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் பலமாக இருந்த அணி தற்போது முகங்கொடுக்கின்ற கசப்பான நிலைமையில் அதனை மறக்க வேண்டாம் என்று அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

அத்துடன், சற்று பொறுமையாக இருங்கள், எங்கள் மீது நம்பிக்கை வைப்பதை முக்கிய விடயம். மீண்டும் எழுவதற்கு எமக்கு பலமாக இருங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இலங்கை வீரர்களின் பெயர்ககளை வௌியிட்டு வௌியிடப்பட்ட ஊடக அறிக்கையுடன் அவர் இந்த அறிக்கையையும் வௌியிட்டுள்ளார்.