சிங்கப்பூரில் 3 பிரித்தானியர்களுக்கு சிறைத் தண்டனை!!

948

குடிபோதையில் இருந்த பெண்ணை 3 நண்பர்கள் சேர்ந்து பலாத்காரம் செய்ததையடுத்து அவர்களுக்கு தலா 6½ ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த கோங் தாம் தான், வு தாய் சன் மற்றும் மைக்கேல் லி ஆகிய மூன்று நண்பர்களும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிங்கப்பூரில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர்.

அப்போது இரவு விடுதி ஒன்றில் அவர்களது நண்பர் ஒருவர் இளம் பெண்ணின் சம்மதத்துடன் அவருடன் உடலுறவு கொண்டுள்ளார்.

இதையறிந்த அவரின் மூன்று நண்பர்களும் குடிபோதையில் இருந்த அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

குறித்த பெண்ணுக்கு நினைவு திரும்பிய போது அருகில் மைக்கேல் படுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

மூவரும் சேர்ந்து தன்னை பலாத்காரம் செய்ததை உணர்ந்த பெண் இது குறித்து பொலிசில் புகார் அளித்தார்.

வழக்கானது நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த நிலையில் இதில் சம்மந்தப்பட்ட கோங், சன், மைக்கேல் ஆகிய மூவருக்கும் தலா 6½ ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். மேலும், அவர்களுக்கு தலா 8 பிரம்படி தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.