மின்சாரம் தாக்கி தாயும் மகனும் பலி!!

429

லங்காபுர – தல்பொத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் தாய் மற்றும் மகன் உயிரிழந்துள்ளதாக புளஸ்திகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், தயந்தி என்ற பெண்ணும், தஹாம் செத்சர என்ற 7 வயது சிறுவனுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

தாயும், மகனும் பகுதி நேர வகுப்பு நடக்கும் வீட்டுக்கு அருகில் இருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மின் கம்பத்தில் இருந்து தொங்கிய வயரை சிறுவன் பிடித்துள்ளார். அப்போது சிறுவனை மின்சாரம் தாக்கியுள்ளது.

மகனை காப்பாற்ற முயற்சித்த தாயும் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்து புளஸ்திகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.