போதைப்பொருள் கடத்தல் : பிலிப்பைன்ஸில் ஒரே நாளில் 32 பேர் சுட்டுக்கொலை!!

699

பிலிப்பைன்ஸில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சந்தேகத்தின் பெயரில் 32 பேரை அந்நாட்டு பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்.

பிலிப்பைன்ஸின் வடக்கு பகுதியிலுள்ள புலகான் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தியவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் ஒரே நாளில் 32 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரொட்ரிகோ டியுடெர்ட் (Rodrigo Duterte) பிலிப்பைன்ஸின் அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் திகதி பதவியேற்றது முதல் போதைப்பொருளுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

டியுடெர்ட்டின் அழுத்தத்தின் பேரில் கடந்த ஆண்டில் 5,000 பேர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கொல்லப்பட்டனர்.

இந்த செயலுக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் அமெரிக்கா போன்ற உலக நாடுகளும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தன.

இருப்பினும், அதற்கெல்லாம் சற்றும் செவி சாய்க்காமல் குற்றவாளிகளுக்கு எதிரான மிகக்கடுமையான தண்டனைகளை டியுடெர்ட் செயற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.