காதலியை குத்திக் கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற காதலன்!!

216

மாவனெல்ல பகுதியில் இளைஞன் ஒருவன் தனது காதலியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தானும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் கத்திக்குத்துக்கு இலக்காகிய யுவதி உயிரிழந்துள்ளதுடன், இளைஞன் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

உயிரிழந்த 17 வயதான யுவதியின் சடலம் கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கொலை தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளன.

நாமல்கம – தீவெல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான நபரே விஷமருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனும் யுவதியும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், இரு குடும்பத்தாருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞன் யுவதியின் வீட்டிற்குச் சென்று அவரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.