டெங்கு மரணம் 350ஆக அதிகரிப்பு : ஓகஸ்ட் இரு வாரங்களில் 10,500 நோயாளர்கள்!!

498

2017ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 350 பேர் பலியானதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

அத்துடன், கடந்த 7 மாதங்களில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 279 பேராக அதிகரித்துள்ளதாகவும் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.

ஓகஸ்ட் மாதத்தின் கடந்த இரு வாரங்களில் 10 ஆயிரத்து 500 இற்கும் அதிகமானோர் டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.