முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!!

534

தலவாக்கலை – திவ்சிறி பகுதியில் முதியவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த நபர் 63 வயதுடைய பிச்சமுத்து தங்கவேல் என தெரியவந்துள்ளது.

அத்துடன், முதியவர் வசித்து வரும் வீட்டுக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உறவினர்களால் தேடப்பட்டு வந்த நிலையில் இந்த முதியவரிடன் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.