பெண்ணொருவரின் மோசமான செயற்பாடு : 14 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!!

212

கைதி ஒருவருக்கு ஹெரோயின் போதைப்பொருள் கொண்டு சென்ற பெண் ஒருவருக்கு 14 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை பார்வையிடச் சென்ற பெண்ணே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.

கைதியை பார்வையிடச் சென்ற பெண், பற்பசை டியூப்பில் போதைப் பொருளை நிறைத்து நூதனமான முறையில் கொண்டு சென்றிருந்தார்.

இது தொடர்பான வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட 37 வயதான பெண்ணுக்கு மாத்தறை உயர் நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த பதினான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளார்.

இந்த தண்டனைக்கு மேலதிகமாக இரண்டு லட்சம் ரூபா அபராதம் செலுத்த வேண்டுமெனவும், அவ்வாறு செலுத்த தவறினால் மேலும் இரண்டாண்டுகள் தண்டனை நீடிக்கப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் திகதி மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவரை பார்வையிடச் சென்ற போது இவ்வாறு போதைப் பொருள் எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.