இலங்கையில் கோஹ்லி, அனுஷ்கா செய்த காரியம்!!

410

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் அவரது காதலி அனுஷ்கா சர்மா ஆகியோர் இணைந்து கண்டி நகரில் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளனர்.

இலங்கைக்கு விராட் கோஹ்லி தலைமையிலான கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், நடிகை அனுஷ்கா சர்மாவும் இலங்கை வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

அதனை உறுதி செய்யும் வகையில் தற்போது இருவரும் கண்டி நகரில் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளனர். இது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதுடன், வைரலாக பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஓய்வு நேரங்களில் விராட் கோஹ்லி இலங்கையின் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ள நிலையில், ஏனைய வீரர்களும் நுவரெலியா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.