தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2 மாதக் குழந்தை!!

257

பொகவந்தலாவ, குயினா பிரதேசத்தில் 2 மாத பெண் குழந்தை ஒன்றை அடுப்பில் தவறி விழுந்ததாகக் கூறி தீக்காயங்களுடன் இன்று மாலை பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த குழந்தையின் தாய் வீட்டு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேலையில் குழந்தை தவறி விழுந்ததாக பொலிஸாரிடம் குழந்தையின் தாயார் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தீக்காயங்களுக்கு உள்ளான 2 மாத குழந்தையான அனுஷாகுமாரி மேலதிக சிகிச்சைக்களுக்காக பொகவந்தலாவ வைத்தியசாலையிலிருந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மீண்டும் நாவலபிட்டிய வைத்திசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தின்போது தாயும், அவரின் மற்றுமொரு குழந்தையும், தீக்காயங்களுக்குள்ளான குழந்தையும் வீட்டில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சமையல் அறையில் தொங்கவிடப்பட்டிருந்த தொட்டிலில் குழுந்தை உறங்கிக்கொண்டிருந்தபோது தீ பற்றியிருக்கலாம் எனவும் இதனால் குழந்தை தீக்காயங்களுக்கு உள்ளாகியிருக்கலாம் எனவும் பொகவந்தலாவ பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.