குப்பையில் உணவு தேடும் யானைகளின் பரிதாபம்!!

487

 
மனிதர்களின் சுற்றாடலுக்கு செய்யும் தீமைகளால் வன விலங்குகள் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தம்புள்ளை, திகம்பத்த பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று கொட்டப்படும் குப்பைகளை உண்ண வரும் யானைகள் உயிரிழக்கும் ஆபத்து பல வருடங்களாக நீடித்து வருகிறது.

தம்புள்ளை நகரில் சேரும் குப்பைகள் திகம்பத்த காட்டுப் பகுதியிலேயே கொட்டப்படுகிறது. இந்த இடத்தில் உணவு தேடி பெரும் எண்ணிக்கையிலான யானைகள் வருகின்றன.

25 முதல் 30 யானை கொண்ட கூட்டத்தை அங்கும் அடிக்கடி காண முடிவதாகவும் அந்த இடத்தில் உணவு கிடைக்காத நேரங்களில் யானைகள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.