கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பிரான்ஸ் பொலிஸ் அதிகாரி!!

483

தனது மகனுக்கு பரிசு வழங்குவதற்காக எருமை மாட்டின் மண்டை ஓடு மற்றும் கொம்புகளையும் சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயற்சித்த பிரானஸ் நாட்டவர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 56 வயதான பிரான்ஸ் நாட்டவர், யு.எல் 225 என்ற விமானத்தில் டுபாய் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த போது விமான நிலைய பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் பயண பை ஸ்கேன் இயந்திரம் ஊடாக பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நபர் விமான நிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பிரான்ஸ் நாட்டில் பிரதான உயர் பொலிஸ் அதிகாரியாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகனின் கோரிக்கைக்கமைய இவற்றினை கொண்டு செல்ல முயற்சித்துள்ளதாகவும், கொழும்பில் இருந்து நெருக்கமானவர் ஊடாக இவற்றினை கொள்வனவு செய்துள்ளதாகவும் விசாரணை தெரியவந்துள்ளதாக சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.