இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.தோனி இலங்கையில் மாமரம் ஒன்றை நட்டு வைத்துள்ளார்.
விராட் கோஹ்லி தலைமையிலான கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் விராட் கோஹ்லி மற்றும் அவரது காதலி அனுஷ்கா சர்மா ஆகியோர் இணைந்து கண்டி நகரில் மரக்கன்றுகளை நட்டு வைத்திருந்தனர்.
அந்த வகையில் தற்போது தோனியும் கண்டியில் மாமரம் ஒன்றை நட்டு வைத்துள்ளார்.
இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






