கணவனைக் காப்பாற்ற மனைவி செய்த காரியம்!!

364

பொலிஸாரிடமிருந்து தப்பித்துக் கொள்ள அலுமாரிக்குள் ஒழிந்திருந்த நபரை திக்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீதிமன்றில் முன்னிலையாகத் தவறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய அவரது வீட்டுக்குப் பொலிஸார் சென்றுள்ளனர்.

பொலிஸார் கைது செய்வதனை தடுக்கும் நோக்கில் சந்தேக நபர் வீட்டின் அலுமாரி ஒன்றில் மறைந்து கொண்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு வீட்டின் அலுமாரியில் மறைந்திருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.



பாரிய வாகன விபத்து ஒன்று மற்றும் மேலும் மூன்று மோட்டார் போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் மாத்தறை நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள சில வழக்குகளின் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பின்னர் முன்னிலையாகாத காரணத்தினால் பொலிஸார் வீட்டுக்கு சென்று சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது கணவர் நீண்ட காலமாக வீட்டுக்கு வரவில்லை என அவரது மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் தேடுதல் நடத்திய போது குறித்த சந்தேக நபர் அலுமாரி ஒன்றிற்குள் மறைந்திருப்பது பொலிஸாரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.