வவுனியாவில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகளுக்கு 14 நாட்கள் சிறை!!

410

வவுனியாவில் நேற்று (23.08.2017) மதியம் 11 மணியளவில் லஞ்சம் வாங்கிய வனவள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரை லஞ்ச,ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள வனவள பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் இரு உத்தியோகத்தர்கள் நேற்று மதியம் 11 மணியளவில் அலுவலகத்தில் வைத்து லஞ்சம் வாங்கிய சமயத்தில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டனர்.

பொதுமக்களினால் வழங்கப்பட்ட ரகசிய முறைப்பாட்டிற்கு அமைவாகவே இத் திடிர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு உத்தியோகத்தர் தெரிவித்தார்.



கைது செய்யப்பட்ட இரு உத்தியோகத்தர்களும் நேற்று மாலை வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சமயத்தில் இருவருக்கு 14நாட்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிவான் தீர்ப்பளித்தார்.