மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை!!

1195

குடிபோதையில் மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்ய முயற்சித்த கணவருக்கு கடுமையான வேலையுடன் கூடிய ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இடம்பெற்ற மதுபான விருந்தின் பின்னர் இந்த கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.

குற்றத்தை ஏற்றுக் கொண்ட ஓய்வு பெற்ற முன்னாள் பொறியியலாளருக்கு மேல் மாகாண உயர் நீதிமன்ற நீதிபதி பியசிலியினால் இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனைகளுக்கு மேலதிகமாக 10000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தண்டனைக்கு மேலதிகமாக சம்பவத்தில் படுகாயமடைந்த மனைவிக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் நஷ்டஈடாக வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கட்டான மிரிஸ்வத்த பிரதேசத்தை சேர்ந்த 67 வயதான ஓய்வு பெற்ற பொறியியலாளர் துஷார பெர்ணாட் ஸ்டீவன் என்பவரே குற்றத்தை ஏற்று கொண்டவராகும்.

2012ஆம் ஆண்டு ஜுன் மாதம் 19ஆம் திகதி இந்த கொலை முயற்சி இடம்பெற்றுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மனைவியினால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை