கிளிநொச்சி சிறுமி துஸ்பிரயோக சம்பவம் : சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!!

968

கிளிநொச்சி – முரசுமோட்டைப் பகுதியில் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கிய சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு நேற்று முன்தினம் (23.08) கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் பதில் நீதிவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி, முரசுமோட்டைப் பகுதியில் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கிய சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேநபர்கள் இருவரும் நேற்று முன்தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றின் பதில் நீதிவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.