நிலச்சரிவில் சிக்கி 500 பேர் பலி, 810 பேர் மாயம்!!

856

மேற்கு ஆபிரிக்க நாடானா சியரா லியோனில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 810க்கும் மேற்பட்டவர்கள் மாயமகியுள்ளதாகவும் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சியரா லியோனில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால், அந்நாட்டின் தலைநகரில் உள்ள மலைப்பகுதியில் பெருமளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், சுமார் 2000 க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் 500க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், 800க்கும் அதிகமானோரின் நிலை இன்னும் தெரியவில்லை எனவும் அறிவித்துள்ளது.

பலியானவர்களில் 159 குழந்தைகளும் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமானவர்களின் கதி என்னவென்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மீட்ப்புப்பணிகளுக்காக சர்வதேச உதவிகளை அந்நாட்டின் ஜனாதிபதி பட்மடா கமரா கோரியுள்ளார்.