மினுவாங்கொடை கம்மன்கெதர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலையுண்டவர்கள் தந்தையும் மகனும் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமான மோதல் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த அசம்பாவிதத்திற்கு காரணம என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.






