இறக்குவானை படேயாய எந்தான பிரதேசத்தில் 19 வயதான யுவதியொருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எந்தான பிரதேசத்திலுள்ள வீடொன்றினுள் வைத்து குறித்த யுவதி கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலைக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்






