வறட்சி காரணமாக 18 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!!

286

நாட்டில் நிலவிவரும் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தொகை 18 இலட்சத்திற்கு அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிிவத்துள்ளது.

மொரனாகலை மாவட்டமே வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொனராகலை மாபவட்டத்தில் 3 91,468 பேர் பாதிக்க்பபட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

குருநாகலை மாவட்டத்தில் வறட்சி காரணமாக 2 ,56 000 அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளோரின் தொகை 218006 ஆக காணப்படுகின்றது.

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்தார்.