காதலிக்காக 3 வயது மகனை இரக்கமின்றி கொன்ற தந்தை!!

1109

அமெரிக்காவில் காதலிக்காக 3 வயது மகனை கொடூரமாக கொலை செய்த தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் நியூ ஜேஸி மாகாணத்தில் வசித்துவரும் டேவிட் என்ற 23 வயது தந்தையே இவ்வாறு 3 வயது மகனை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

டேவிட்டிற்கு மனைவி இல்லாததால் 17 வயதான மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்து வந்துள்ளார். காதலி வீட்டிற்கு வரும் ஒவ்வொரு முறையும் டேவிட்டின் மகன் அப்பெண்ணை சுற்றி வந்து விளையாடியுள்ளார்.

இது காதலிக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் மகன் இருந்தால் நான் வீட்டிற்கு வர மாட்டேன் என காதலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காதலியின் மீது மோகம் கொண்ட தந்தை தான் பெற்ற மகனை கொடூரமாக கொலை செய்து உடலை வெளியே கொண்டு சென்று மறைத்துள்ளார்.

பின்னர் பொலிசாரை தொடர்புக்கொண்டு எனது 3 வயது மகன் எனக்கு தெரியாமல் வெளியே ஓடிவிட்டான் என பொய் கூறியுள்ளார்.

தந்தையின் புகாரை பெற்ற பொலிசார் மறுநாள் சிறுவனின் உடலை கண்டுபிடித்துள்ளனர். உடலை பரிசோதனை செய்தபோது சிறுவன் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டில் நிகழ்ந்த இந்த கொலை தொடர்பான விசாரணையில் தந்தை தனது குற்றங்களை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் எதிர்வரும் செப்டம்பர் 29ம் திகதி தந்தைக்கு தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.