வீதியில் உறங்கியவருக்கு நேர்ந்த அவலம்!!

218

 
நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று அதிகாலை 4.30 அளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் 50 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வீதியோரமாக உறங்கிக் கொண்டிருந்த குறித்த நபர் மீது கொழும்பிலிருந்து பயணம் செய்த கன்டெய்னர் வாகனம் மோதியுள்ளது.

சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்விபத்தில் கொச்சிக்கடை நகரில் அமைந்திருந்த இரு கடைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்

விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.