கிளிநொச்சியில் கசிப்பு காய்ச்சிய பெண் கைது!

541

கிளிநொச்சி, திருநகர் வடக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக  கிளிநொச்சி மாவட்ட உதவி மதுவரி பொறுப்பதிகாரி நியூட்டன் அவுட்ஸ்பேன் தெரிவித்துள்ளார்.

மதுவரி திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று பிற்பகல் குறித்த பகுதியில் சுற்றுவளைப்பு தேடுதலை மேற்கொண்ட போது சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்திசெய்த குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணை நாளை  கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட உதவி மதுவரி பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்