மண்டைதீவு 3 ஆம் வட்டாரத்தில் உள்ள சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவர் 14 வயதுச் சிறுமியை தவறான முறையில் அணுகியதை தனது தொலைபேசி மூலம் புகைப்படம் எடுத்தது தொடர்பாக ஊர்காவற்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுவர் பாலியல் உரிமை மீறல்கள் மற்றும் சிறுமி சகிதம் வேலணை துறையூரில் வசிக்கும் குறித்த சமுர்த்தி உத்தியோகஸ்தருக்கு எதிராக பெற்றோர் ஊர்காவற்துறைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் மண்டைதீவு 3 ஆம் வட்டாரத்தில் உள்ள சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் அந்த பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியை தனது அலுவலகத்திற்குள் அழைத்து தவறான முறையில் அணுகியுள்ளார்.
அத்துடன், அவற்றினை தனது தொலைபேசி மூலம் புகைப்படம் எடுத்துள்ளார். இவற்றினை அவதானித்த சிலர், சமுர்த்தி உத்தியோகஸ்தரின் தொலைபேசியை பறித்ததும் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் ஊர்காவற்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.