குடும்பத்தகராறு காரணமாக இளைஞர் தற்கொலை!!

868

மதவாச்சி – பிஹிவியகொலாவ பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (14.09) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தகராறு காரணமாக 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதவாச்சி, பிஹிவியகொலாவ பகுதியில் வசித்து வரும் சிசிர குமார (வயது 23) , என்பவருக்கும் அவரது மனைவிக்குமிடையில் சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் அதிகரித்ததன் காரணமாக வீட்டை வீட்டு வெளியேறிய சிசிரகுமார என்ற இளைஞன் வீட்டின் அருகேயுள்ள பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.