மியன்மாரில் இருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கான விசாக்களை இரத்துசெய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியான செய்தியை குடிவரவு-குடியகழ்வு திணைக்களம் மறுத்துள்ளது.
குறித்த செய்தியானது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்னவை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்றில் வெளியிடப்பட்டிருந்தது.
சுற்றுலாப்பயணிகள் என்ற போர்வையில் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் இலங்கைக்குள் வரலாம் என்ற எச்சரிக்கையின் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.






