இலங்கையில் பிரித்தானிய ஊடகவியலாளரின் இறப்புக்கான காரணம் வெளியானது!!

214

அம்பாறை – பாணமை பொலிஸ் பிரிவில் முதலை குன்று பிரதேசத்தில் முதலை தாக்கி மரணமடைந்ததாக கூறப்பட்ட பிரித்தானியா ஊடகவிலாளரான போல் மெக்கலம், நீரில் மூழ்கியதால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அம்பாறை வைத்தியசாலையில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கடந்த 14 ஆம் திகதி அலையில் வழுக்கிச் செல்லும் விளையாட்டின் பின்னர், போல் மெக்கலம் கடோலான பிரதேசத்தின் களப்பு பகுதிக்கு சென்ற போது முதலை இழுத்துச் சென்றதாக கூறப்பட்டது.

இதனையடுத்து நேற்று முன்தினம் பொலிஸாரும், கடற்படை சுழியோடிகளும் இணைந்து சடலத்தை மீட்டனர். நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக சடலம் அம்பாறை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அம்பாறை வைத்தியசாலையில் சட்டவைத்திய அதிகாரியான விசேட மருத்துவ நிபுணர் ஏ. இளங்கோவன் நேற்று பிரேதப் பரிசோதனைகளை நடத்தினார்.

போல் மெக்கலமின் வலதுகாலில் காயம் இருந்த போதிலும் நீரில் மூழ்கியதே மரணத்திற்கு காரணம் என பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

பிரித்தானிய ஊடகவியலாளரின் இடதுகாலை கடித்தப்பின்னர் அவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக பிரேதபரிசோதனையில் தெரியவந்துள்ளது.

24 வயதான போல் மெக்லின் கடந்த வாரம் அருகம்பேயில் முதலையினால் இழுத்துச்செல்லப்பட்டு நீரில் மூழ்கி மரணமானார். இதனையடுத்து ஒருநாளின் பின்னர் அவரின் சடலம் மீட்கப்பட்டது.

இந்தநிலையில் குறித்த ஊடகவியலாளரின் காலில் 6 பற்களின் அடையாளங்கள் காணப்பட்டன. எனினும் குறித்த ஊடகவியலாளரை முதலைதான் கடித்தது என்ற விடயத்தை பிரேத பரிசோதனையில் குறிப்பிடவில்லை. ஏனெனில் அவரின் காலை பல உயிரினங்கள் கடித்த காயங்களும் உள்ளன.