மலேசியாவில்  இலங்கையர் உட்பட 111 வெளிநாட்டவர்கள் கைது!!

487

மலேசியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 111 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜோஹர் பஹ்ரு நகரில் உள்ள செனாய் தொழில்துறை பகுதியில் உள்ள தங்குமிட விடுதியொன்றில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செல்லுபடியாகக்கூடிய பயண ஆவணங்கள் இல்லாத நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்கள பணிப்பாளர் டடுக் செரி முஷ்டபார் தெரிவித்துள்ளார்.

46 பேர் பங்களாதேஷ், 22 பேர் மியன்மார், 17 பேர் நேபாளம், 11 பேர் இந்தோனேஷியா, 4 பேர் வியட்னாம், 3 பேர் பிலிப்பைன்ஸ் முதலான நாடுகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர ஏனையவர்கள், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா முதலான நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.