சிறுவனின் மண்டை ஓட்டில் துப்பாக்கி ரவை : வெற்றிகரமாக நீக்கிய வைத்தியர்கள்!!

466

மூன்று வயது சிறுவனின் மண்டை ஓட்டிலிருந்த துப்பாக்கி ரவை வைத்தியர்களால் வெற்றிகரமாக நீக்கப்பட்டுள்ளது.

கேகாலை கஜுகஸ்வத்தை பிரதேசத்தை சேர்ந்த 3 வயதுடைய சிறுவனுக்கு சத்திர சிகிச்சையின் மூலம் ரவை நீக்கப்பட்டுள்ளது.

பயிர் செய்கைகளை சேதப்படுத்தும் குரங்குகளை துறத்துவதற்காக பயன்படுத்தப்படும் காற்று துப்பாக்கி பற்றியமையினால் குறித்த சிறுவன் அண்மையில் காயமடைந்தார்.

சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று தனது சகோதரரனின் வீட்டிற்கு இந்த சிறுவன் சென்றுள்ளதாகவும், கதவுக்கு அருகில் இருந்த காற்று துப்பாக்கி கீழே விழுந்து வெடித்துள்ளதாகவும் காயமடைந்த சிறுவனின் தாய் தெரிவித்துள்ளார்.

சிறுவனின் சத்தம் கேட்டு சென்ற போது தலை பகுதியில் இருந்து அதிகளவான இரத்தம் வெளியேறியுள்ள நிலையில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதன் போது பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை மேற்கொண்ட வைத்தியர், சிறுவனின் காது பக்கமாக சென்ற குண்டு மண்டை ஓடுவரை பயணித்துள்ளதாகவும், மேலும் சேதம் ஏற்பட்டால் சிறுவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் குழந்தைகள் தொடர்பான விசேட வைத்தியர் குழுவொன்று மேற்கொண்ட வெற்றிகரமான சத்திர சிகிச்சையின் பின்னர் சிறுவன் இயந்திரத்தின் உதவியுடன் ஆரோக்கியமான நிலைக்கு வந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்று நாட்களின் பின்னர் நேற்று அந்த இயந்திரம் நீக்கப்பட்டுள்ளதாகவும், சிறுவன் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக வைத்தியர் கபில ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்.