வவுனியாவில் 13 வயது சிறுமி அவரது அக்காவின் கணவரால் பாலியல் பலாத்காரம்..

436

child abuse

வவுனியாவில் 13 வயது பாடசாலை மாணவியொருவர் அவரது அக்காவின் கணவரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாக வவுனியா பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.

வவுனியா சாந்தசோலை கிராமத்தில் 13 வயதுடைய பாடசாலை மாணவி அவருடைய சகோதரியின் கணவரால் பல நாட்களாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளார்.

எனினும், குறித்த சிறுமியை பாதுகாக்கவோ, அவருக்கு உதவவோ எவரும் முன்வரவில்லை. இந்நிலையில் சிறுமி அக்கிராம மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர் ஒருவரிடம் நேற்று முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து அக்கிராம மாதர் அபிவிருத்தி சங்கத்தால் வவுனியா பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், அக் கிராமத்திற்கு சென்று சிறுமியை அழைத்துச் சென்று வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக மேலும் தெரிய வந்துள்ளது.

பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் வவுனியா பொலிஸ் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.