நவராத்திரி ஆரம்பிக்கும் திகதியில் ஏற்பட்டுள்ள சிக்கல்!!

499

பஞ்சாங்கங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 20 மற்றும் 21 ஆம் திகதி நவராத்திரி விரதமாக காணப்படுகின்றது.

வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில் 20 திகதியும், திருக்கணித பஞ்சாங்கம் படி 21 ஆம் திகதியும் நவராத்திரி விரதம் ஆரம்பமாகுகின்றது.

20 ஆம் திகதி ஆலயங்களிலும், வீடுகளிலும் நவராத்திரி விரத பூஜைகள் நடத்துவதற்கு உகந்த நாளாக அமைகின்றது.

அத்துடன் 21 ஆம் திகதி நவராத்திரி விரத கும்பஸ்தாவனம் செய்வதற்கு சிறந்த நாளாகும். இந்துக்களின் வழிபாட்டு ரீதியாக நவராத்திரி விரத ஆரம்பம் 21 திகதியாகும். இந்த பூஜைகள் தொடந்தும் ஒன்பது நாட்கள் இடம்பெறும்.