புனே மைதானத்தில் நேற்று அவுஸ்திரேலிய இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்களை எடுத்தது.
அந்த அணியின் ஹக்ஸ் 53 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுத்தார். பின்ச் அதிரடியாக ஆடி 79 பந்துகளில் 3 ஆறு ஓட்டங்கள் 8 நான்கு ஓட்டங்களுடன் 72 ஓட்டங்களை குவித்தார். அவருடன் 82 பந்துகளில் பெய்லி ஜோடி சேர்ந்து 85 ஓட்டங்கள் குவித்தார். மேக்ஸ்வெல் 31 ஓட்டங்களையும் பால்க்னர் 27 ஓட்டங்களையும் குவித்தனர்.
50 ஓவர் இறுதியில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்கள் எடுத்து இமாலய இலக்கை நிர்ணயித்தது.
305 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 232 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து தோல்வியைச் சந்தித்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 61 ஓட்டங்கள், ரோஹித் சர்மா 42 ஓட்டங்கள், சுரேஷ் ரெய்னா 39 ஓட்டங்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் மிகக்குறைந்த ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர்.