வடகொரிய அதிபரின் உண்மை முகம் : அம்பலமாகும் ரகசியங்கள்!!

812

வடகொரியாவில் இருந்து தப்பிய முன்னாள் ராணுவ அதிகாரியின் மகள் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் வுன் குறித்து வெளியிட்டுள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியாவில் உயர் பதிவியில் இருந்த ராணுவ விரர் Wui Yeon Lim. 51 வயதான இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இவரின் மகள் Hee Yeon Lim (26) வடகொரியாவில் இருந்து தப்பி தற்போது தென் கொரியாவில் தஞ்சமடைந்துள்ளார். அங்குள்ள ரகசியமான இடத்தில் தமது குடும்பத்துடன் தங்கியிருக்கும் இவர், வடகொரிய தலைவர் கிம் ஜோங் குறித்து வெளிப்படுத்தியிருக்கும் தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் உறவில் அதிக நாட்டம் கொண்ட கிம் ஜோங் வுன் பாடசாலை மாணவர்களை தமது பிரத்யேக குடியிருப்புகளில் பணிக்கு அமர்த்துவதாகவும், அவர்களுடன் உறவு வைத்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.

இதற்கெனவே சில அதிகாரிகள் நாட்டில் உள்ள பாடசாலைகளில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபடுவதாகவும் Hee Yeon Lim தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில் இருந்த நாட்களில் பல துயர சம்பவங்களை தாம் நேரிடையாக பார்த்ததாக கூறும் அவர், 11 இசைக்கலைஞர்களை பொதுவெளியில் கட்டி வைத்து விமானங்களை சுட்டு வீழ்த்தும் துப்பாக்கியால் படுகொலை செய்தது தமது வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் என தெரிவித்துள்ளார்.

பெரும் விருந்து பிரியரான கிம் ஜோங் வுன் அடிக்கடி தமது நெருங்கிய ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாகவும், ஆனால் நாட்டில் ஏழ்மை தலைவிரித்தாடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிம் ஜோங் வுன் ஆட்சி அதிகாரத்தில் வந்த பின்னர் இதுவரை 25 மில்லியன் மக்களை கைது செய்து சிறையில் தள்ளியுள்ளதாக கூறும் அவர், அவர்களின் நிலை என்ன என்பது குறித்து எவ்வித தகவலும் வெளியுலகிற்கு தெரியாத வகையில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

தமது தந்தையின் மறைவுக்கு பின்னர் வடகொரியாவில் இருந்து வெளியேற வேண்டும் என முடிவு செய்ததும், பல அதிகாரிகளுக்கும் லஞ்சம் தரவேண்டிய நிலை ஏற்பட்டது எனக் கூறும் அவர், லாவோஸ் பகுதியில் இருந்து தென் கொரியா தலைநகர் வந்து சேர்வதற்கு மட்டும் 5000 பவுண்டுக்கும் மேலாக செலவானது என தெரிவித்துள்ளார்.