வவுனியாவில் அநாதரவான நிலையில் முச்சக்கர வண்டி பொலிசாரால் மீட்பு!

742

வவுனியா புகையிர நிலையவீதியில் அமைந்துள்ள மக்கள் வங்கிக்கு முன்னால் அமைந்துள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு அருகாமையில் இரண்டு நாட்களுக்கு மேலாக அநாதரவாகவிடப்பட்ட NP AAJ- 9101 என்று இலக்கமிடப்பட்ட பச்சை நிற முச்சக்கர வண்டியை இன்று (21.09) காலை 8.15 மணியளவில் கையகப்படுத்தி அதனுடைய உரிமையாளரை இனங்காண்பதற்கான விசாரனையை ஆரம்பித்துள்ளனர்.

 NP AAJ- 9101 என்று இலக்கமிடப்பட்ட பச்சை நிற முச்சக்கர வண்டி பின்பக்கம் தேசியக் கொடியுட, மறத் தமிழன்   (ஜெஸ்டின்) என்னும் வாசகங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

இவ் முச்சக்கரவண்டி கடந்த இரு தினங்களாக முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் அநாதரவாக இருந்ததை கண்டு சந்தேசகம் கொண்டதினாலேயே தாம் பொலிசாருக்கு அறிவித்தகாக அப் பகுதி முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் தெரிவித்தார்கள்.

பொலிசார் முச்சக்கரவண்டி பரிசோதித்து விட்டு மேலதிக விசாரனைக்காக பொலிஸ் நிலையத்திற்கு முச்சக்கர வண்டியை எடுத்துச் சென்றுள்ளனர்.