இத்தாலியில் இலங்கை இளைஞர்கள் இருவர் கடுமையாக மோதிக் கொண்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்று முன்தினம் இத்தாலி வெரோனா நகரத்தின் பிரதான ரயில் நிலையத்திற்கு அருகில் இலங்கையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இருவருக்கும் இடையிலான மோதலை கட்டுப்படுத்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எதற்காக மோதல் ஏற்பட்டது என்பது தொடர்பில் தகவல் வெளியாகவில்லை. எனினும் இந்த மோதல் சம்பவம் இத்தாலிய மக்களை கடும் அதிருப்பதியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.