அமெரிக்காவில் இருந்து  இலங்கை வந்த மாப்பிள்ளைக்கு நேர்ந்த அவலம்!!

319

அமெரிக்காவில் இருந்து திருமணம் செய்வதற்காக இலங்கை வந்தவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் கலாநிதி பட்டம் பெற்ற 35 வயதான ஆண் ஒருவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் வடபகுதியை சேர்ந்த ஆண் மற்றும் பெண் வீட்டார், தரகர் மூலம் திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

மணப்பெண்ணின் அனுமதியுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதுடன், கொழும்பில் திருமணத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
எனினும் திருமணத்திற்கு முதல்நாள் மணப்பெண் தலைமறைவாகி உள்ளார். இதனால் மணமகன் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.

மணப்பெண் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்காமல், இரு வீட்டாரும் அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்தநாள் காலை மணமகன் திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அவரின் வீட்டுக்குச் சென்ற பெண்ணின் தந்தை நடந்த சம்பவத்தை கண்ணீருடன் தெரிவித்தார்.
மணப்பெண் தனது காதலனுடன் தலைமறைவாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் வீட்டார் பெண் வீட்டாருடன் தர்க்கப்பட்டனர்.

இரு வீட்டாருக்கும் முறுகல் நிலை ஏற்பட்டதுடன், எதிர்பார்ப்புடன் சென்ற மணமகன் திருமணம் நடைபெறாமையினால் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

ஏமாற்றம் தாங்க முடியாத மாப்பிள்ளை உடனடியாக அமெரிக்கா நோக்கி செல்ல தயாரானதாக தெரிய வருகிறது.