விபத்தில் படுகாயமடைந்த யுவதி வைத்தியசாலையில்!!

484

மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியுடன் மாடு ஒன்று மோதியதில் முச்சக்கர வண்டியில் பணித்த யுவதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து சம்பவம் நேற்று (21.09) காலை இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் தாழங்குடா தேவாலயத்திற்கு அண்மித்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பழுகாமத்தில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்று மீண்டும் பழுகாமத்திற்கு சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது மாடு மோதியதால் அனர்த்தம் சம்பவித்துள்ளது.

இதனால் முச்சக்கர வண்டி பாதையில் இருந்து தள்ளப்பட்டு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், அதில் பயணித்த யுவதி ஒருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

இதேவேளை, முச்சக்கர வண்டி சாரதிக்கு சிறிய காயங்கள் மாத்திரமே ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.