படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி!!

610

அம்பாறை, ஒலுவில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நபரொருவர், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளாரென, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று காலை (21.09) கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் விபத்தில் ஒலுவில் 4ஆம் பிரிவைச் சேர்ந்த சம்சுதீன் பஸீல் (வயது 44) என்பவரே உயிரிழந்தவராவார்.

சடலம், அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.