இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் ஒருநாள் போட்டி சென்னையிலும், இரண்டாவது ஒருநாள் போட்டி கொல்கத்தாவிலும் நடைபெற்றது. இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான டேவிட் வார்னரின் இன்ஸ்டிராகிராம் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதில் வார்னர் சென்னைக்கு வந்த எனது குழந்தைகள் சென்னையை அழகாக ரசித்தனர், அதுமட்டுமின்றி காரை நிறுத்தி லெமன் ஜுஸ் வேண்டும் என்று கூறி அடம்பிடித்து வாங்கிக் குடித்தனர் என்று பதிவேற்றம் செய்துள்ளார்.