நெருப்பில் இருந்து வெளிப்படும் புகை எப்படி மேல் நோக்கிச் செல்கிறது என்று நீங்கள் என்றாவது யோசித்து உள்ளீர்களா? காரணம் இதோ..
புகை மேல்நோக்கி செல்வது ஏன்?
பூமி முழுவதும் பரவி காணப்படும் காற்றின் அடர்த்தி, புகையின் அடர்த்தியை விட அதிகமாக இருக்கும். இதனால் புகையை விட, காற்றின் மீது புவி ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும்.
அப்போது காற்று கீழ் நோக்கி இறங்கும். அடர்த்தி குறைந்த புகை மட்டும் மேல் நோக்கிச் செல்லும். இந்நிகழ்வு கூட புவி ஈர்ப்பு விசையால் நடைபெறுகிறது.
இந்த புகையை போலவே மென்மையான நீராவியும் மேல் நோக்கிச் சென்று மேகமாக மாறி மழையாகப் பொழிகிறது.
புவி ஈர்ப்பு விசை மட்டும் இல்லாவிட்டால் புகையோ அல்லது நீராவியோ மேல் நோக்கிச் செல்ல முடியாது.