நாயின் உயிரை காப்பாற்ற 350 கிலோமீட்டர் தூரம் ஓடிய இளைஞன்!!

218

 
தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் அறுவடை செய்யும் இயந்திரத்தில் சிக்கி நான்கு கால்களையும் இழந்த நாய் ஒன்று தொடர்பில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

அபாயகட்டத்திலிருந்து நாய்க்கு ஆரம்ப சிகிச்சையை தம்மிக்க பண்டார என்ற இளைஞனே மேற்கொண்டுள்ளார்.

குறித்த இளைஞனினால் நாய் கண்டுபிடிக்கப்பட்டு உயிரிழக்கவிடாமல் சிகிச்சையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட சிகிச்சையின் பின்னர் கால்களை இழந்த நாயை அஹங்கம பிரதேசத்தில் உள்ள Animal SOS நிறுவனத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கால்களை இழந்த நாயை காப்பாற்ற பொலன்னறுவையில் இருந்து 350 கிலோமீட்டர் தூரம் அஹங்கமவுக்கு சென்றுள்ளனர்.

தெரு நாய் ஒன்றின் உயிரை காப்பாற்றுவதற்காக இவ்வாறு தனது காலம், நேரம் மற்றும் பணத்தை செலவிட்ட இளைஞனுக்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.