காணிப் பிரச்சினையில் சகோதரனை கத்தியால் குத்திக் கொன்ற சகோதரி!!

540

arrest1

காணி பிரச்சினை காரணமாக தனது சகோதரியின் கத்திக்குத்துக்கு இலக்கான சகோதரர் உயிரிழந்த சம்பவமொன்று கந்தான பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

கந்தான – பண்டிகொட பகுதியில் இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 42 வயதுடைய ஜயக்கொடி ஆராச்சிகே என்பரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் பண்டிகொட – அல்கேனவத்த பகுதியில் வசித்து வந்துள்ளனர். அதே பகுதியில் தான் ஜயக்கொடி ஆராச்சிகேவும் வசித்து வந்துள்ளார்.

இவர்களுக்கு இடையில் நீண்ட நாட்களாக காணிப் பிரச்சினை நிலவி வந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் ஏற்பட்ட வாய் தர்க்கத்தின் போது சகோதரி தனது சகோதரனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
கந்தான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.