அவுஸ்திரேலிய அணியுடன் தோல்வி : புலம்பும் டோனி!!

325

Dhoni

இந்திய அணியில் துடுப்பாட்டம், பந்துவீச்சு என எதுவுமே சரியில்லை என புலம்பிக் கொண்டிருக்கிறார் அணித்தலைவர் டோனி. இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.

புனேயில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்விடைந்தது. இதுகுறித்து இந்திய அணியின் அணித்தலைவர் டோனி கூறுகையில் புனே ஆடுகளம் 300 ஓட்டங்களுக்கு மேல் எடுக்கும் அளவுக்கு இல்லை.

நாங்கள் தான் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களை அதிக ஓட்டங்கள் எடுக்க விட்டுவிட்டோம். இடையில் எங்களது சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக செயல்பட்டு மீண்டு வர முயற்சித்தனர்.

ஜடேஜா, யுவராஜ் சிங் நன்கு பந்துவீசியும், அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை. துடுப்பாட்டத்தை பொறுத்த வரையில் ரோகித் சர்மா, விராத் கோலி இணைந்து நல்ல இணைப்பாட்டம் அமைத்தனர்.

ஆனால் மதிய வரிசையில் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தனர். மற்றபடி தோல்விக்கு யாரையும் குறிப்பாக குற்றம் சொல்ல விரும்பவில்லை, துடுப்பாட்டம்- பந்துவீச்சு என எதுவுமே சரியாக அமையவில்லை.

அடுத்து வரும் போட்டிகளில் இதுபோன்ற தவறு நடக்காத வகையில் பார்த்துக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.