தனக்கு கொலை மிரட்டல் விடுத்தாக புகார் அளித்த கவர்ச்சி நடிகை ஜோதி மீனா அந்த புகாரை உடனடியாக திரும்ப பெற்றுள்ளார்.
சென்னை பாண்டிபஜார் பொலிஸ் நிலையத்தில் ஜோதிமீனா பரபரப்பு புகார் மனு அளித்தார். அதில், என்னுடைய வீட்டுக்குள் நேற்றுமுன்தினம் மதியம் 2 மணியளவில் ராகுல், நவீன், பிரவீன் ஆகிய 3 பேர் புகுந்தனர், அவர்கள் என்னிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர்.
நான் பணம் தர மறுத்துவிட்டேன், இதனால் அவர்கள் என்னை தாக்கினர், மேலும் என்னையும், எனது மகனையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து சென்று விட்டனர் என்று கூறியிருந்தார்.
ஜோதிமீனாவுக்கு 3 பேரும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது, இந்தநிலையில் தான் அளித்த புகார் மனுவை ஜோதிமீனா உடனடியாக திரும்ப பெற்றுவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.