சோதனையில் முடிந்த திருமண தம்பதியின் சாதனை : கின்னஸ் உலக சாதனை அமைப்பு எச்சரிக்கை!!

505

 
உள்ளூர் சட்டங்கள் மீறப்பட்ட எந்தவொரு சாதனையை தாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என கின்னஸ் உலக சாதனை பதிவுகளின் மூத்த PR முகாமையாளர் Doug Male உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த விடயங்களை நாங்கள் முக்கியமாக கருத்திற்கொள்வோம் என அவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி கண்டி நகரில் ருவன் புஷ்பகுமார மற்றும் சஜினி பிரியங்கிகா சுரவீரவின் திருமணத்தின் போது உலக சாதனை நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

நீண்ட ஒசரி சேலையை அணியும் கின்னஸ் உலக சாதனையை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதும் உலகளாவிய ரீதியில் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றுள்ளனர்.

புதிய உலக சாதனையை ஏற்படுத்தும் முயற்சிக்கு 250 பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருமண நாளன்று அதிகாலையிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை கட்டாயப்படுத்தி, கன்னொறுவ – கண்டி சாலையில் 3.5 கீலோ மீற்றர் தூரம், குறித்த மாணவர் நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.

நாங்கள் ஒரு விண்ணப்பத்தை பெற்றுள்ளோம், எனினும் விண்ணப்பத்தை பற்றிய விபரங்களை இன்னும் விவாதிக்க முடியாமல் உள்ளதென Doug Male தெரிவித்துள்ளார்.

அது சாதனையாக இருந்தாலும், மாணவர்களை தவறான முறையில் ஈடுபடுத்தப்பட்டமை தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகள் தொடர்பில் கின்னஸ் உலக சாதனை பதிவு முகாமையாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த சாதனையை உறுதி செய்வதென்றால், சுயாதீனமான சாட்சி அறிக்கைகள் உட்பட ஒரு மிக விரிவான மற்றும் கடுமையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ஆதாரங்கள் அவசியமாகும்.

சான்றுகளின் பின்னர் நிபுணர்கள் ஒரு குழு மதிப்பாய்வு செய்ததனை தொடர்ந்து இறுதி முடிவு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.