தாக்குதல் நடத்தும் முனைப்புடன் நாட்டுக்குள் நுழையும் அமெரிக்கா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும் என்று வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
நியூயோர்க்கில் செய்தியாளர்களை சந்தித்த வடகொரியா வெளியுறவுத்துறை அமைச்சர் ரி யோங் ஹோ, தங்களுக்கு எதிரான போரை முதலில் அமெரிக்கா தான் அறிவித்ததாக குற்றம் சாட்டினார். எனவே அமெரிக்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வடகொரியா தயங்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
வடகொரியாவின் வான் எல்லையில் மட்டுமல்ல, எல்லைக்கு வெளியே பறக்கும் போர் விமானங்களையும் சுட்டு வீழ்த்த தங்களுக்கு உரிமை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ரி யோங் ஹோ தெரிவித்துள்ள கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க செய்தித் தொடர்பாளர் விசானா சேன்டஸ், வடகொரியாவின் மீது போர் தொடுக்கும் அறிவிப்பு எதுவும் அமெரிக்கா வெளியிடவில்லை என்றார்.
ஒரு நாட்டின் வான் எல்லையில் இருக்கும் விமானங்களை மற்றொரு நாடு சுட்டு வீழ்த்துவோம் என்று கூறுவது சர்வதேச நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்றும் சாரா கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இலக்கில் மாற்றமில்லை என்ற அவர், கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவுவதையே அமெரிக்கா விரும்புவதாக கூறியுள்ளார்.






